பாவ மன்னிப்பை ஏற்றல்

 

1. பாவ மன்னிப்பை ஏற்றல்

இராகம் : சுபபந்துவராளி

நடத் : அன்புடை இறைவா அடியவர் நாங்கள்     உம்மிடம் பற்றாம்

உறுதி பூண்டோம்

சபை : உறுதி பூண்டோம்

நடத் : பாவம் மன்னித்தருளியெமது மனத்தில் சாந்தி மேவிடச் செய்யும்

சபை : மேவிடச் செய்யும்

நடத் : ஆண்டவர் கிறிஸ்து இயேசு வழியே வேண்டுகின்றோம்

சபை : வேண்டுகின்றோம்.


2. அருள்மறை வேண்டல்

 

இராகம் : நாட்டை      இடையிசை: நி ச் நீ /பா மா கா சா

தாளம் : சதுஸ்ரஆதி                                 மா கா சா/ பா பா

 

நடத் : திருமறை ஓதும் பெருநெறியாவும் எளியவர் காண அருள்வோரே

சபை : திறமுடை ஞானம் வளநிறைவோடு உளமதில் நாளும் தருவோரே

நடத் : இருள் மறைந்தோட ஒளி மிகுந்தோங்க அடியவர் வாழ விழைவோரே

சபை : அருள்மறை கூறும் உரையதன் மூலம் அணைந்தெமை ஏந்தவரவேணும்.

Comments