Posts

Showing posts from May, 2022

நேயநல் வானகத் தெங்கள் தந்தாய்

  ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் ( பாடல் வழி ஆக ) 1. நேயநல் வானகத் தெங்கள் தந்தாய்   தூயதாய் நின்பேர் தொழப்படுக   வருக நின் அரசே திருச் சித்தமே   பெருக விண்ணதில் போல் மண்ணுலகில்   2. அன்றன்று வேண்டிய எம் உணவை   இன்றெமக் கீந்தருள் பொழிந்தருள்வாய்   பிறர்பிழை நாங்கள் பொறுப்பதுபோல்   எம் பிழையும் பொருத்தருள் புரிவீர்   3. சோதனை நேர்கையில் எமை விலக்கி   தீதினை நீக்கியே மீட்டருள்வாய்   ஆட்சியும் ஆற்றலும் சீர்த்திமிகு   மாட்சியும் யாண்டுமே உமக்குரிய

நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே

நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே     நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே   நன்மைகள் நாளும் நினைந்திடுதே   என்னருள் நாதர் அருட்கொடைகள்   எத்தனை ஆயிரம் என்றிடுதே ... ஆ ! ஆ !    ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள்   ஆறுகள் காடுகள் நீர்நிலைகள்   சூழ்ந்திடும் தென்றல் நீள்மரங்கள்   தூயநல் தேன்மலர் தீங்கனிகள்        இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள்    எழிலுடன் குழந்தைச் செல்வங்கள்    துன்புறும் வேளையில் துணைக்கரங்கள்    துதித்திட சொல்லுடன் ராகங்கள்      உறவினில் மகிழ்ந்திட நண்பர்கள்    உதவிகள் செய்திட் பல்பணியர்   அறவழி காட்டிட அருள் பணியர்   அன்புடன் ஏற்றிட ஆண்டவர்      உருவுடன் விளங்கிட ஓருடலம்   உடலதில் இறைவனுக்கோர் இதயம்   பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழிய   திருமறை பேசிடும் வானுலகம் .