ஒரு நாள் வருவார் மனுவின் மகனாய்

 

பல்லவி

ஒரு நாள் வருவார் மனுவின் மகனாய்

அருகில் இருந்திடுவார் என

இறைவாக்காளர் உரைத்தது போல

இறை மகன் இயேசு வந்தார் - இன்று

மனு மகன் இயேசு வந்தார்                                 - ஒரு நாள்

 

 

 

 

சரணம்

1.     அடிமையின் வாழ்வை ஆண்டவர் வெறுத்தார்

ஆள்களை அனுப்பித் தந்தார் - இன்று

விடியா வாழ்வில் விடுதலை அளிக்க

விடிவெள்ளி இயேசு வந்தார் - இன்று

அடியரை அணைக்க வந்தார்       - ஒரு நாள்

 

2.     இறைவர் நம்மோடிருந்திட வந்தார்

குறைவில் நிறைவு தந்தார் - இன்று

கூக்குரல் எழுப்பும் மாந்தர் தம் வாழ்வில்

ஏக்கம் தீர்க்க வந்தார் - நல்ல

ஆக்கம் அளிக்க வந்தார்          - ஒரு நாள்

Comments

Popular posts from this blog

ஒளியென உலகில் உதித்தவர் இயேசு

நேயநல் வானகத் தெங்கள் தந்தாய்