வழிபடுவோம் வாரீர்
வழிபடுவோம் வாரீர்
வழிபடுவோம் வாரீர்- இறைப்பதம்
தொழுதிடுவோம் வாரீர்
துங்கவர் இயேசுவின் திருப்பெயரை
தூதர்களின் பரிவாரத்துடன்
தூயா தூயா தூயாவென
துத்தியம் செய்து போற்றிடுவோம்
துங்கவர் இயேசு நல்லவரே
துதிகளுக்கென்றும் பாத்திரரே - வழிபடுவோம்
பாவியின் நேசர் பாதமதில்
பாவங்களை மிகு வணக்கத்துடன்
பணிவாய் அவரிடம் அறிக்கை செய்து
பரமரின் ஆசி பெற்றிடுவோம்
பாவத்தில் கோபம் வைத்திருப்பார்
பாவி மேல் கோபம் வையாரே - வழிபடுவோம்
கேட்டிடுவோம் நல் திருவசனம்
நாட்டமுடன் நாம் நலம் பெறவே
அகத்தின் இருளினைப் போக்கிடுமே
இகத்திலவர் வழி காட்டிடுமே
தாமே வார்த்தையாய் நின்றவரே
Comments
Post a Comment