தொழுகைக்கு அழைப்பு
1. தொழுகைக்கு அழைப்பு
இராகம் : சரசாங்கி முன்னிசை : ச ரி க ம ப த ந ச்
ச் நி த ப ம க ரி ச
நடத் : இறைவரொளியாம் இலையே அவர் பால்
இருளேதும் இல்லையறி
எல்லார்க்கும் பெரியோர் இறைவர் ஒருவரே,
இறையே
ஒப்பேதும் இல்லார் இயேசு கிறிஸ்து
இறைவரின் திருமைந்தர்
2. போற்றுதல்
இராகம்:சிந்துபைரவி இடையிசை: ப த நி ரி ச் நி த ம
தாளம் : சதுஸ்ரஆதி ப த நி த /பா
நடத் : அருவாய் எங்கும் இருப்பாய் போற்றி
பெருமை யாவும் படைத்தாய் போற்றி
சபை : அருவாய் எங்கும் இருப்பாய் போற்றி
பெருமை யாவும் படைத்தாய் போற்றி
நடத் : உலகம் யாவும் வனைந்தாய் போற்றி
நலன்கள் எங்கும் நிறைப்பாய் போற்றி
சபை : உலகம் யாவும் வனைந்தாய் போற்றி
நலன்கள் எங்கும் நிறைப்பாய் போற்றி
இராகம் : ஆரபி இடையிசை : ச் ரி த ச் ப த ம ப
தாளம் : சதுஸ்ரஆதி ம ப த ப ம க ரி ச – ரீ ம பா
நடத்: திருவாக் கென்னும் திருவே போற்றி
பெருவாக் கருளும் பெரியோய் போற்றி
சபை: திருவாக் கென்னும் திருவே போற்றி
பெருவாக் கருளும் பெரியோய் போற்றி
நடத்: மனித உருவில் வந்தாய் போற்றி
புனித அன்பைப் பொழிந்தாய் போற்றி
சபை: மனித உருவில் வந்தாய் போற்றி
புனித அன்பைப் பொழிந்தாய் போற்றி
இராகம் : காபி இடையிசை : ப நி ச ரி நி த ப ம
தாளம் : சதுஸ்ரஆதி கா ம ப க ரி ச ரி க
நடத் : தூய ஆவியாராம் துணையே போற்றி
மாயம் தொலைக்கும் மேலோய் போற்றி
சபை : தூய ஆவியாராம் துணையே போற்றி
மாயம் தொலைக்கும் மேலோய் போற்றி
நடத் : உனக்குள் அடியரை வைத்தாய் போற்றி
மணத்துள் எல்லாம் மலர்வாய் போற்றி
சபை : உனக்குள் அடியரை வைத்தாய் போற்றி
மனத்துள் எல்லாம் மலர்வாய் போற்றி
3. இறை அருள் வேண்டல்
இராகம் : ஆனந்த பைரவி இடையிசை : ப த ப ச் ச் /த ச் நி த பா
தாளம் : திஸ்ர ரூபகம் கா ம பா மா கா ரி /ச ரி க ரீ கா சா
நடத் : எத்திசை யாளரும் தொழு பவரே
இத்திசை ஆரருள் தருவீரே
சபை : பக்தரைத் தாங்கிடும் பெரியவரே
சித்தமே பூண்டெழுந் தருள்வீரே
நடத் : எத்தகை யோரையு மணைவோரே
இத்தலத் தோரையு மணைவீரே
சபை: சுத்தரே இயேசென்னும் பெயராளரே
மெத்தவே ஆவியை அருள்வீரே
Comments
Post a Comment