ஆண்டவா, உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்

 திருப்பணிக்கொடைப் பாடல்


பல்லவி


ஆண்டவா, உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்

தூண்டும் உன் ஆவி அருள்வாய்

அனுபல்லவி

என்னைத் தியாகிக்க ஏவும்

உன் அனல் மூட்டிடுவாய்

இந்நிலம் தன்னில் மாளும்

மனுமக்கள் மீட்பிற்காக -                                                                               ஆண்டவா

சரணங்கள்

1.புசிக்கப் பண்டமில்லாமல்

   பூவில் இல்லமுமே அன்றி

   நசிந்து நலிந்து நாட்டில்

   கசிந்து கண்ணீர் சொரிந்து

   தேச மெல்லாம் தியங்கும்

   நேசமக்கள் சேவைக்கே

   நிமலா, எனை ஏற்றுக்கொள் -                                                   ஆண்டவா   

 

2.வறுமை வன் கடன் வியாதி

  குருட்டாட்டம் கட்சி கடும்

  அறிவீனம் அந்தகாரம்

  மருள் மூடி மக்கள் வாடும்

  தருணம் இக்காலமதால்

  குருநாதா, உனதன்பை

  அருள்வாய், அடியேனுக்கே -                                           ஆண்டவா   

 

3.அருமை ரட்சகா, உன்றன்

   அரும்பாடு கண்ணீர் தியாகம்

   பேரன்பு பாரச் சிலுவை

   சருவமும் கண்ட என்றன்

   இருதயம் தைந்துருவி

   வெறும் பேச்சாய் நின்றிடாமல்

   தருணம் எனையே தந்தேன் -                                                        ஆண்டவா

 

4.உலகே உன தாயினும்

   தலை சாய்க்கத் தாவில்லாமல்

   நலமே புரிந்து திரிந்தாய்

   எல்லாம் துறந்து யான் உன்

   நல்லாவி கொண்டுழைக்க

   வல்லவா, உனின் சிலுவை

   அல்லால் வழி வேறுண்டா? -                                          ஆண்டவா

Comments

Popular posts from this blog

ஒளியென உலகில் உதித்தவர் இயேசு

நேயநல் வானகத் தெங்கள் தந்தாய்

ஒரு நாள் வருவார் மனுவின் மகனாய்